என்னவனே
என் இதய சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ்பவனே
என் சோகத்தைக் கேட்டு
சோகமே அழுகிறதடா,,,
உன் நினைவுகள் தந்த
கற்பனைக் கனவுகளில் திரையிட்டு
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க,,
நிமிர்ந்து பார்க்க
இருளில் தெரிகிறது உன் உருவம்.
அறை முழுவதும் உன் குரல்கள்
எப்பவும் போல் ஓங்கி ஒலிக்கின்றன.
இமைகள் மூடினால்
இமையோரம் உன் நினைவு பிசுபிசுப்பு
உறங்கிடவும் முடியவில்லை
கனவிலும் உன் நினைவுகள்.
உதறி எழுந்தேன்
கதறி அழ,,
கட்டிலில் ஆழ்ந்து உறங்கும்
உன் சாயலைக் கண்டதும்
கசக்கி எரிந்தேன் கனவையும்
எதிர்பாரா இடைவெளி
உனக்கும் எனக்குமாய்,,,,,,
கரம் பிடித்து வந்தவளின்
காவலனே
உன்னைவிடவும் வேறொருவன்
இவ்வுலகத்தில் எனக்குண்டோ
என்னைப் பற்றி நான் என்ன நினைத்தாலும்
உனக்காக இறங்கிவந்தேன்
உன்னையே பற்றியதால்
காரணங்கள் பல
நீ
கூறியும் கூறாமலும்
என்னை மறுத்துவிட்டு போனாலும்
உந்தன் கபட உணர்வுகளால்
உன்னால் ஒதுக்கப்பட்ட இவள்
காத்திருக்கிறாள்
உன்னை வரவேற்க
இல்லத்திலும்
உள்ளத்திலும்,,,
சரி, பொங்கல் விடுமுறை முடிந்து பதிவு வெளியிட முடியாத படி பல வேலைகள், இப்போ எல்லாம் முடிந்தது, இது உங்களுக்காக பொங்கல் பதிவாக வெளியிட சேகரித்தவை,,,,
நான் பணிபுரியும் கல்வி நிறுவனத்தில் பொங்கல் வைத்தபோது,,
மாணவிகள் கை வண்ணக் காவியங்கள்,,
முயற்சித்தேன் டீ வடிகட்டியில் கோலம் போட
நல்லா இருக்கா,,,
உங்களுக்கு தேரிந்தவர் தான் ,,,,,,,
பள்ளியில் பொங்கல் கொண்டாடத் தான் இப்படி
இவங்களும் தான்,,,,
நன்றி