Thursday, 31 March 2016

இனி தொடர்வோம்,,,,,,,,,,


                                                  இனி தொடர்வோம்,,,,,,,,,,

    வலை உறவுகளே வணக்கம், நலம் தானே, மீண்டும் வந்தாச்சு,

 பிள்ளைகளின் தேர்வுகாலம் என்பதால் தான் தொடர்ந்து எழுத படிக்க

இயலவில்லை. இனி தொடர்வோம்,,,,,,,,,,   இது உங்களுக்காக,,

                                                    மனம்

பெண்களின் காதல்

பூவில் உள்ள

பனித்துளி போன்றது

இது அழகானது,,,,,

ஆண்களின் காதல்

செடியின் வேரில் உள்ள

நீரைப் போன்றது

இது ஆழமானது,,,,

உன் முகம் பாத்ததில்லை

உன் முகவரியும் தெரிந்ததில்லை

இருந்தும் உன் குரலுக்காய்

காத்திருக்கிறேன்

நாளும்,,,,

யாரும் வந்து

நம்மை காயப்படுத்தும் வரை

நம் வலிமை

நமக்கு தெரிவதில்லை ,,,,,,

வாழ்க்கையில்

நம்பிக்கை வைக்கனும்

யாரையும்

நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,

                                                                            நன்றி,,,,
                                                           

Monday, 7 March 2016

வேறானவள்


                                                                வேறானவள்

                                           
                                           
                                            பெண் கவிதை க்கான பட முடிவு


பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பெண் முன்னேற்றம் குறித்த கவிதை, இன்றும் அப்படியே, கவியும் கவிப்பொருளும்,,,,


பாரதியின் இலட்சிய கனவே
முட்டிகளுக்குள் புதைத்துக்கொள்ளவா 
உன் பட்டுமுகம் படைக்கப்பட்டது,
நெல்மணிக்கு தப்பிய நீ 
சொல்மணியாய் சுடர்விடத்தான்
கோழிக்குழம்புக்குத் தப்பிய நீ
கோள்களின் போக்கிற்கே 
புதுக்கவிதை விளக்கம் கூறத்தான்,
கள்ளிபாலுக்கு தப்பிய நீ 
காலங்களையே மாற்றி அமைக்கத்தான்,
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ 
அடிமைத்தளை களையத்தான் 
இப்படித் தான் பல கவிகள்
புரட்சி கவிகள் எழுதினேன்,,
ஆனால் இன்றும் 
நான் காண்பது என்னவோ
மெத்த படித்த அவள்
படித்த  பதறாக ,,,,,,,,,,,
அடிமையாய்,,,,,,
போகப்பொருளாய்,,,
காட்சிப்பொருளாய்,,,
அடங்காப்பிடாரி எனும் பட்டத்துடன்
அலங்கோளமாக,,,,,
இன்னும் இன்னும்,,,,,,
ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
மேலானவளும் அல்ல
வேறானவள் 
பாரதியே,,,,,,,,,,,
பெண் முன்னேற்றம்
உன் எழுத்தின் சாதனைதான்
ஆனாலும்
நடக்கும் அநியாயம் 
கண்டு கலங்கியிருப்பாய்,
இன்று நீ இருந்திருந்தால்,,,,,,,,,,,,
பெண்கள் தினம்,,,,,,,
 கொண்டாட்டம்,,,
மனம் வலிக்கிறது 
பெண்ணாய் பிறந்ததற்கு,,,,,

மகத்துவம் மிக்க 
என் இனிய சமூகமே 
என்று நீ 
அவளை மனுசியாய்
பார்க்கப்போகிறாய்???
பெண்ணை
நல்ல தோழியாய்,,,,
நல்ல மாணவியாய்,,,,
நல்ல அகத்தவளாய்,,,,,
இதுவே போதும்
அவள் நலமுடன் வளமுடன் வாழ,,,
வாழவிடு ,
வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில்,,
நிஜத்தில்,,

                                                   ரோஜா க்கான பட முடிவு                                               
                                            
 

Saturday, 13 February 2016

ஒற்றை ரோஜா

                                            மகிழ்ச்சியான காதல் கவிதைகள் க்கான பட முடிவு

நட்புகள் எல்லோரும்,  இன்று காதலர் தினம்,  பதிவு ஒன்னும் எழுதலையா என்றனர்.

இருக்குற வேலையில் இப்பவெல்லாம் கணிப்பொறி முன் அமர்ந்தாலே ,,,

வேற வேலை இல்லையா என்று சத்தம் வருகிறது,,.

ஆனாலும் அவசர அவசரமாக நாலு வரி எழுதிப்போகிறேன்,,,


அழகிய மாலை நேரம்

அவன் வந்தான்

நேற்று உன்னைப் பார்க்க வந்தேன்

நீ இல்லையே,

ஊருக்குச் சென்றேன்

ம்ம்

என்ன 

அது வந்து,,

இது உனக்காக வாங்கி வந்தேன்

பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான்

பாடம் ஆகிப் போன 

ஒற்றை சிவப்பு 

ரோஜா,,

இது என்ன இப்படியிருக்கு

நேற்று வாங்கியது

ஏன் இன்று வாங்கினால் என்னவாம்

இல்லை நேற்று தான் வாங்கனும்

இன்று வாங்கினாலும் சம்மதம் தான்

சம்மதம் ன்னா

ம்ம்,,,

இது எப்புடி,,,,,
                                                      ரோஜா பூ க்கான பட முடிவு
படங்கள் இணையத்தில் இருந்து,,,

Tuesday, 9 February 2016

யாந்துஞ் சலமே,,,,,


                          மயிலின் கால்கள் க்கான பட முடிவு
 இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலோடு இயைந்த ஒன்று, சங்க இலக்கிய குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது,,

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
         
                                         குறுந்தொகை
                                         பாடல் எண் 138
                                         கொல்லன் அழிசி
                                         மருதத்திணை


         கொன்னூர் துஞ்சனும் யாந்துஞ் சலமே
         எம் இல் அயலது ஏழில் உம்பர்
         மயிலடி இலைய மா குரல் நொச்சி
         அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
         மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 (இப்படியும் பிரித்து பார்க்கலாம் என,,)

  முதல்நாள் உரிய இடத்தே தலைவன் வருவான் என எதிர்பார்த்து அவன் அன்று வரவில்லை. அடுத்த நாள் அவன் வரும்  போது, நேற்று வருவீர் என்று எதிர்பார்த்து தலைவி தூங்கவில்லை என்பதைத் தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்வதைப்போல் தோழி சொன்னது,,,

    ஊர் முழுக்க தூங்கியது. நான் மட்டும் தூங்கவில்லை. என் வீட்டிற்கு அருகில் உள்ள உயர்ந்த ஏழில் குன்றத்தின் அருகில் உள்ள, மயிலின் கால்களைப் போன்ற இலைகளையுடைய நொச்சி மரத்தின் பெரிய கொத்துக்களாக உள்ள, நீலமணியின் நிறத்தை ஒத்த மலர்கள், மென்மையாகக் கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே படுத்திருந்தேன்.
   
சொல் விளக்கம் -

கொன்னூர் - (பரிய ஊர் ) ஊர் முழுக்க

துஞ்சினும் - தூங்கினாலும்

யாந்துஞ்சலமே - நான் தூங்கவில்லை

எம் இல் அயலது - என் வீட்டிற்கு அருகில்

ஏழில் உம்பர் - உயர்ந்த ஏழில் மலையில் மேலுள்ள

( ஏழில் என்பது ஒரு மலை. இது மன்னன் நன்னன் என்பவனுக்குரியது)

மயிலடி இலைய - மயிலின் அடியைப் (கால்களைப்) போன்ற இலைகளை உடைய

மா குரல் - கருமையான அல்லது பெரிய குலைகள்

நொச்சி - நொச்சி

அணிமிகு - மிகவும் அழகான 

மென் கொம்பு - மெல்லிய கிளைகள்

ஊழ்த்த - உதிர்த்த 

மணி மருள் - நீலமணியைப் போன்ற

பூவின் பாடு - பூக்கள் விழுவதைக்

நனி கேட்டே -  மிகக் கேட்டவாறு 


                                                              நொச்சி பூ க்கான பட முடிவு
மயிலின் கால்கள் க்கான பட முடிவு

படங்கள் இணையத்திலிருந்து,,


Friday, 5 February 2016

என் இதய சிம்மாசனத்தில்,,,,,



                                                  ஏன் இந்த மாற்றம்
 
என்னவனே
என் இதய சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ்பவனே
என் சோகத்தைக் கேட்டு
சோகமே அழுகிறதடா,,,
உன் நினைவுகள் தந்த
கற்பனைக் கனவுகளில் திரையிட்டு
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க,,
நிமிர்ந்து பார்க்க
இருளில் தெரிகிறது உன் உருவம்.
அறை முழுவதும் உன் குரல்கள்
எப்பவும் போல் ஓங்கி ஒலிக்கின்றன.
இமைகள் மூடினால்
இமையோரம் உன் நினைவு பிசுபிசுப்பு
உறங்கிடவும் முடியவில்லை
கனவிலும் உன் நினைவுகள்.
உதறி எழுந்தேன்
கதறி அழ,,
கட்டிலில் ஆழ்ந்து உறங்கும்
உன் சாயலைக் கண்டதும்
கசக்கி எரிந்தேன் கனவையும்
எதிர்பாரா இடைவெளி
உனக்கும் எனக்குமாய்,,,,,,
கரம் பிடித்து வந்தவளின்
காவலனே
உன்னைவிடவும் வேறொருவன்
இவ்வுலகத்தில் எனக்குண்டோ
என்னைப் பற்றி நான் என்ன நினைத்தாலும்
உனக்காக இறங்கிவந்தேன்
உன்னையே பற்றியதால்
காரணங்கள் பல
நீ
கூறியும் கூறாமலும்
என்னை மறுத்துவிட்டு போனாலும்
உந்தன் கபட உணர்வுகளால்
உன்னால் ஒதுக்கப்பட்ட இவள்
காத்திருக்கிறாள்
உன்னை வரவேற்க
இல்லத்திலும்
உள்ளத்திலும்,,,

சரி, பொங்கல் விடுமுறை முடிந்து பதிவு வெளியிட முடியாத படி பல வேலைகள், இப்போ எல்லாம் முடிந்தது, இது உங்களுக்காக பொங்கல் பதிவாக வெளியிட சேகரித்தவை,,,,

                          
             
நான் பணிபுரியும் கல்வி நிறுவனத்தில் பொங்கல் வைத்தபோது,,
                                                                                                                 

மாணவிகள் கை வண்ணக் காவியங்கள்,,


முயற்சித்தேன் டீ வடிகட்டியில் கோலம் போட
                                                                                              நல்லா இருக்கா,,,


உங்களுக்கு தேரிந்தவர் தான் ,,,,,,,
                                                             
                                                               பள்ளியில் பொங்கல் கொண்டாடத் தான் இப்படி



இவங்களும் தான்,,,,






                                                                                                                   
                                               
                                                      ரோஜா க்கான பட முடிவு
                                                               

                                            நன்றி

Tuesday, 12 January 2016

அளவுக்கதிமான அன்பு



அளவுக்கதிமாக அன்பை 
பிறருக்கு கொடுக்கவும் கூடாது
பிறரிடமிருந்து பெறவும் கூடாது
இரண்டுமே வேதனையைத் தான் தரும்.



         
அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,


   




சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல
கவலையை ம(றை)றக்க
கற்றுக்கொண்டவர்கள்.






சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்
சிலர் அன்பு எப்போதும் புரியாது
அதை
காலம் உணர்த்தும் போது தான்
கண்கள் கலங்கும்



                                                                                                                                      

Friday, 8 January 2016

எண்ணங்கள் தெளித்த வண்ணக்கோலங்கள்

 

எண்ணங்கள் தெளித்த 

வண்ணக்கோலங்கள்


                 

வண்ணமயிலே 
ஏன் இந்த அழகிய நடனம், 
இருட்டை கார்மேகம் என்று 
நினைத்தாயா
இல்லையா 
பின்னே
மகியின் கை வண்ணத்தில்
வாசலில் துளிர்த்ததனால்
வந்த  துள்ளல் நடனமே,,,,,,,
                                                                                           (இது கொஞ்சம் ஓவரா இல்ல)


வண்ணக் கலவையில் 
வரைந்த  
வண்ணமலர்களே
வாசல் நிறைக்கும் 
அழகு கோடுகளே
வசந்தம் வளரட்டும் 
நாளும்,,,,,,,,,
                                                                                                    


இழைகளுக்குள் கண்சிமிட்டுவது
வானத்து நட்சத்திரங்கள் தூவிய 
வெண்மலர்கள்


கபிலன் 
சொன்ன பூக்களையும் 
விஞ்சிவிடுகின்றன 
கோலத்தில் காணகிடக்கும்
 பூக்களின் வடிவங்கள்
எந்த கவிஞன் 
கவிகள் சொல்வான் 
இவ்வடிவங்களுக்குரிய 
பெயர்களைத் தன் கவியில்,,,,,,,

       

எண்ணங்கள் தெளித்த 
வண்ணக்கோலங்கள் 
விடியலின் இருட்டில்
விழித்த கோலம்
புத்தாண்டில்,,,,,,,,

 

அழியப்போவது தெரிந்தும் 
அழகாய் சிரிக்கிறாய் 
ஒஒஒ 
நீயும் 
விட்டில் பூச்சா



சிதறா கவனத்தில் 
சிதறும் வெண்துளிகள் 
கோல மழையாய்
என் வீட்டு வாசலில்,,,,,,,

                                                                      தொடரும்,,,,,,,,,,