Monday, 22 September 2025

    அனைவருக்கும் வணக்கம் 

      இணையத்தில் இயங்குதல் என்பது இன்று  இயலாமல் போனது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் மீண்டும் இயங்கும் சூழலில் இணையத்திற்குள் நான். ஒரு கட்டத்தில் வலைப்பூவில் எழுதுதல் என்பது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தது.  பின்னொரு சமயத்தில் இவை அனைத்தும் மாறிப்போனது. முழு முதற் காரணம் வேறு இல்லை.சோம்பல் தான். இன்று மீண்டும் எழுதுதல் என்பது என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கக் கூடிய,  என் அடிப்படையான இயக்க வாதிகளுக்காக. ஆம் என் அருமை மாணவர்களுக்காக  மீண்டும் வலைப்பூவில் தொடர் ஓட்டத்தை எடுத்திருக்கின்றேன். 

                        வேகமான ஓட்டம் அல்ல.  மிதமான ஓட்டமே. என் மாணவர்களும் என்னோடு. என்னை முந்தக்கூடிய அவர்களின் பின்னே நான். எதைப் படித்தாலும் எதைப் பார்த்தாலும் உடனடியாக எழுதிட வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனாலும் ஏனோ எழுதிட துணிவதில்லை. பதிவு செய்து வைத்திட எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள். முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும். இனிமேலும் தொடர்ந்து எழுதுவோம் என்ற நம்பிக்கையில் எழுதிட முனைந்துள்ளேன். வாசித்து வாழ்த்துதலான பின்னூட்டத்தை முன் போலவே எனக்கு அளித்திட வேண்டுகிறேன். 



No comments:

Post a Comment