Sunday, 20 April 2025

 

வாழ்க நம் தமிழ்த்தாய்! வாழ்க நம் தனிமொழி.,

        நூற்றாண்டு கண்ட நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இற்றை நாள் ஐம்பெரு  விழாதனைத் தலைமையேற்று நடத்திட மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை முன்மொழியப் பட்டும் வழி மொழியப் பட்டும் ஐம்பெரு விழா இனிதே துவங்கியது . தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைத் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி இரா. இராசாமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். நிகழ்வில் முன்னிலை வகித்த கரந்தைத் தமிழ்த் சங்கத்தின் செயலாளர் திரு இரா.சுந்தரவதனம் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களையும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வணக்கத்திற்குரிய தஞ்சையின் மேயர் துணைமேயர் கழகத் தொண்டர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள் என அனைவரையும் வரவேற்று தன் முன்னிலை உரையை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் மொழிக்காய் தமிழ்ச்சங்கம் பாடுப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிச் சென்றார்.

 சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டினன் அவர்களின் திருஉருவப்படத்தினையும், நூற்றாண்டு கண்ட தமிழ்ப்பொழில் இதழின் இலச்சினையும்(Logo), இந்தி மொழி எதிர்ப்பு குறித்த  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான காக்கை விடு தூது என்னும்  நூலினையும், வா.மு.சே முத்துராமலிங்க ஆண்டவரின் தமிழின் பெருஞ்சுவர் மற்றும் வள்ளலார் காலமும் கருத்தும் என்னும் நூலினையும் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். தம் உரையில் இது போன்றதொரு தமிழ் பெரும் கூட்டத்தினைத் தான் யாங்கனும் கண்டதில்லை என்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் ஆற்றி வரும் தமிழ்ப்பணியின் சிறப்புதனை வெகுவாக பாராட்டினார்கள்  உலகத்திலேயே உயிர்ப்போடு இயங்கக்கூடிய ஒரு தமிழ்ச் சங்கமாக கரந்தைத் தமிழ்ச் சங்கம் இருக்கின்றது என்று பாராட்டியும் வாழ்த்தியும் இச் சிறப்பு மிக்க கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு தாம் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்றும் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்கள் . திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்  திரு. துரை சந்திரசேகரன் அவர்கள் மகிழ்வான வாழ்த்துரை வழங்கினார்கள் தஞ்சை மக்களவை உறுப்பினர் திரு.ச. முரசொலி அவர்கள், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு .டி .கே .ஜி .நீலமேகம் அவர்கள், தஞ்சையின் மாநகர மேயர் திரு. சன் இராமநாதன் அவர்கள், கும்பகோணம் துணை மேயர் சுப. தமிழழகன் அவர்கள்,  தஞ்சை மாவட்ட அவைத்தலைவர் திரு   சி. இறைவன் அவர்கள், தஞ்சாவூர் துணை மேயர் திருமதி. அஞ்சுகம் பூபதி அவர்கள் தமிழ் மக்களுக்கு கரந்தத் தமிழ்ச்சங்கம் ஆற்றி வரும் சிறப்புகளை வெகுவாக பாராட்டி தம்முடைய வாழ்த்துரையை வழங்கினார்கள் .

       பேராசிரியர் முனைவர்.வா. மு. சே. ஆண்டவர் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க புலவர் கல்லூரியின் மேனாள் மாணவர் இந்நாள் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் கோ. தேய்வாநாயகம் அவர்கள் தமிழ்ப்பொழில் நூற்றாண்டு தொடக்க விழா சிறப்புரையும் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இந்தி எதிர்ப்பும் எனும் பொருண்மையில்  உரைதனையையும் மிகச் சிறப்பாக நிகழ்த்தி அமைந்தார்கள். கரந்தைக் கலைக் கல்லூரியின் வேதியல் துறை மாணவர் வெற்றி கண்ணன் அவர்கள் இந்தி மொழி எதிர்ப்பு குறித்தும் கரந்தைத் தமிழச் சங்கத்தின் பெருமை குறித்தும் பாடல் வெகு சிறப்பாக பாடினார்.

           நிகழ்வின் இறுதியாக  கலந்து கொண்ட தமிழ் உறவுகளுக்கு  தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியரும் தமிழ்ப்பொழில் இதழின் பொறுப்பாசிரியர் ஆகிய முனைவர் சீமகேசுவரி அவர்கள் நன்றி கூறினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு தனை தஞ்சை மாநகர் மன்ற உறுப்பினரும் கரந்தைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினரும் ஆகிய திரு சுந்தர. செந்தமிழ் செல்வன் அவர்கள் வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.

தமிழ்ப்பொழில் இலச்சி(Logo),

சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டினன்

காக்கை விடு தூது



Thursday, 2 January 2025

 

வாழ்த்துகள்

வசந்தங்கள் சொந்தமாகட்டும்

வாழ்க்கை முழுதும்


Thursday, 26 December 2024

 




விண்வெளியெங்கும்

தேடியலைகிறேன் உன்னை

என் கண்ணில் தெரிவதை

நீ விரும்பவில்லை என்பதை

அறியாமல்

Saturday, 21 December 2024

 

வலிமையற்ற விரல்கள்



 

உள்ளத்தில் உள்ள 

உன் பெரிய உருவத்தை

 வெளிபடுத்த

சிந்தைத் துடித்ததாலும் 

வலிமையற்ற விரல்கள்

என்ன செய்யும்

Tuesday, 17 December 2024

 

சிறைவைக்க


நொடியேனும் தூங்க விடாமல் 

என்னை இம்சிக்கிறாய் 

கனவில் 

அதிகாலைப் பொழுதே எழுந்து 

என் கற்பனைகளைக் 

கைவண்ணத்தில் 

சிறைவைக்க முயற்சித்து 

எப்போழுதும் 

தோற்றேப் போகிறேன்,,,,,

மீண்டும் 

ஒரு கனவிற்காய் 

காத்திருக்கிறது மனம்

Monday, 16 December 2024


 வணக்கம்







மார்கழி

ஒரு பதினொருமாதங்கள் உனக்காய் 

காத்திருக்கிறேன்.

மனதிற்கு மிக நெருக்கமாகிப் போனதால்

Sunday, 31 December 2023

 

சட்ட நூலாய் தொல்காப்பியம்

              தொல்காப்பிய ஆசான் , தோழிக்கும் தலைவிக்குமுள்ளஉறவைப் பொருளியலில் பொருள் நிலையோடு ஒப்பிட்டுப்பேசும்  பகுதியே அது. ஆம் அங்கு தான் ஒரு மனிதன் தன்னுடைய சொத்துக்கள் என்று எவ்வவற்றை  உரிமைக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இதோ அப்பாடல்

            தாயத்தின் அடையா ஈயச் செல்லா

            வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

            எம்மென வருஉம் கிழமைத் தோற்றம்

            அல்ல வாயினும் புல்லுவ வுளவே

                                                                   (தொல்.பொருளியல்.நூற்பா 24)

ஒருவர் ஒரு பொருளைத் தனது என்று உரிமை கொண்டாடுவதற்கு நான்கு வழித்தடங்களே உள்ளன.

1.          தம் முதாதையர்களால் வாரிசு அடிப்பமையில் கிடைக்கும் பொருள்.

2.        கொடைப்பொருளாக அல்லது அன்பளிப்பாக பெறப்படும் பொருள்.

3.        தம் நேரிய உழைப்பால் கிடைத்த பொருள்

4.        போட்டிகளில் ஈடுபட்டோ வழக்குகளில் ஈடுபட்டோ வெற்றியால் தமக்கு கிடைத்த பொருள்

என இந்நான்கு வழிகளில் வரும் பொருள்களே ஒருவரின் உரிமைப் பொருள்கள். பிற வழிகளில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் தனது என்று ஒருவர் கூற அவருக்கு உரிமையில்லை

இது சரி தானே

நம் இலக்கியங்கள் நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளன. நாம் தான் வரப்புச் சண்டை போட்டு, வயல் விற்று வழக்கு நடத்துகிறோம்.

சரிங்க

இப்பாடல் இதனை மட்டும் சொல்லவில்லை, தலைவியின் மேல்  தனக்குள்ள உரிமையைப் தோழி கூறுவதாக விளக்க வந்த பாடல்.

                                                                  நன்றி

அனைவருக்கும்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.