Friday 28 August 2015

என் சுவாச மானவனே




                       கற்பக விருச்சமே காளையே கண்ணே

                       கற்கண் டேகவி வானே- யென்னுயிர்

                       முத்தமி ழேமுக் கனியே முல்லையே

                       முத்தார மேமுத்த மிட்டேன்,

 


என்னைச் சுவாசிக் கவைத்த கண்ணே

என்சுவா சமான வனே - வான்

முகில் பார்க்கும் ஏந்திழை இவள்

 மகிழ்ந்து முத்தமிட் டேன்னடா,

 

                    நீஅழு வதுகூட அழகுதான் கண்ணே

                    நீயோ முழுமதி யாய்யென்- முகம்

                    பார்க்க பரவச மாகிறேன் பார்த்துன்

                    பாதத்தில் முத்தமிட் டேனடா,


  பூலகில் வாழமுடி வெடுக்க வைத்த

 பூவே உன்மழ லையில் - மற்றதை

மறந்தேன டாமயக் கம்தந்த மகனே

மறவனே முத்தமிட் டேனடா



விழுகிறாய் எழுகிறாய் சிரிக்கிறாய் கண்ணே

விழுவதும் எழுவதும் விதியின் - செயலா?

உன்னிட மிருந்து தான் இதை

உணர்ந்துக் கொண்டே னடா- கண்ணே



   
கல்விக் கற்று கவிபலப் புனைந்து

               கலைகள் யாவும் உன்கை வரப்பெற்று

    பார்போற்றும் வாழ்க்கை நீ வாழ 

வாழ்த்துக்கிறேனடா,,,,,,,,,,

 அன்புள்ளங்களே கடந்த 27.08.2015  இவரின் 7 வது பிறந்தநாள்.
உங்கள் வாழ்த்துக்களோடும் வளரட்டும்,,,,,,,,,,,
                                                                                                        

                                          
                                               Image result for ரோசா பூக்கள்
                                                                   

                                                                    நன்றி    



Thursday 13 August 2015

தீம் புளிப் பாகர்




                       தீம் புளிப் பாகர்
          Image result for மோர் குழம்பு படம்


    எனக்கு மோர் குழம்பு மிகவும் பிடிக்கும். ஆனால் பாருங்கள் செய்யத்தான் தெரியாது. சக தோழிகளிடம் கேட்டேன், அவர்கள் சொன்னது ஒன்றும் புரியல, உடன் என் நினைவுக்கு வந்தது, நம்ம சாராதாம்மா தளம். சரி அதில் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்து, அவர்கள் தளத்தில் பார்த்துச் செய்யலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து நகர தொடங்கிய நிலையில், என் உடன் இருப்பவர்கள் ஏன் உன் சங்கத் தமிழில் இது பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா? என்று கிண்டல் செய்தார்கள்,,,,,,, 


ஆம் ,,,,,,,,,,,,,,

அவர்களுக்கும் உங்களுக்குமாய் இதோ,,,,,,,,,,

நம்ப இலக்கியம் காட்டும் மோர்குழம்பு தான் இன்றைய பதிவு,,,,,,,,, 

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்த அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
                                     கூடலூர் கிழார்.

இது நம் தமிழ் இலக்கியம் காட்டும் குறுந்தொகைப் பாடல். 

தலைவியின் கை வண்ணத்தில்,,,,

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,,,,,,,,,,,,

முற்றிய தயிருடன் சில பொருட்கள் சேர்த்து பிசைந்து,பிசைந்த கையைத் தன் சேலையிலே துடைத்துக் கொள்கிறாள். விறகு அடுப்பினை சரியாக எரிய விட அதனை ஊதும் போது ஏற்படும் புகையினால், கண்கள் எரிந்து கலங்குகிறது, அதனால் கண்களில் தீட்டிய மை கலைந்து, இப்படி ஒரு கோலத்தில் அவள் செய்து முடித்த மோர்குழம்பினைக் கனவனுக்கு பரிமாறுகிறாள். கனவனும் நன்றாக உள்ளது என்று உண்ணும் அழகிய காட்சியினைப் இப்பாடல் விளக்குகிறது.

திருமணம் ஆன புதிய தம்பதியர்கள், இவர்களின் தனிக்குடித்தன அழகைக் கான செல்லும் செவிலித்தாய், தான் கண்டு வந்த நிகழ்வுகளைத் தன் சுற்றத்திடம் சொல்லும் பாடல்.

மோர் குழம்பு வைக்க முதலில் வேண்டிய அளவு அரிசி துவரம்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் பச்சைமிளகாய், சீரகம், தேங்காயையும் சேர்த்து அம்மியில் இல்ல இல்ல இப்ப மிக்ஸியில் அரைத்து, ஏற்கனவே வைத்துள்ள கெட்டி மோருடன் கலக்க வேண்டும்.

இதை அடுப்பில் வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலையுடன் தாளித்து கொட்ட வேண்டும். குழம்பு நுரைத்துவரும் போது அடுப்பை அணைக்க வேண்டும்.

சாராதாம்மா செயல்முறை விளக்கம் சரியா?

சரிங்க நம்ம இலக்கியத்திற்கு வருவோம்,,,,,,,

முளி தயிர் முற்றிய தயிர் (நன்கு கெட்டியான,நன்கு காச்சப்பட்ட,,,,,,,சுன்ட காச்சப்பட்ட,,, 

பிசைந்த கலக்கிய, துழாவுதல்,,,,,, 

காந்தள் பூ 
  
மெல் விரல் மெல்லிய மென்மையான விரல்கள் 

கழுவுறு - கலந்த, கலக்கிய

 

கலிங்கம்   - ஆடை,,, பட்டாடை

கழாஅது  கழுவாமல் (கழா அல்)

குவளை உண்கண் கண்களின் விளிம்பு, குவளை மலர் போன்ற,,,,,,,,,,,

குய்ப் புகை தாளிப்பு புகை,(குய்-தாளிப்பு புகை) இங்கு தாளிப்பதால் எழும் புகை, விறகு அடுப்பில் இருந்து வரும் புகை,,,,,,,,

கழுமத் சோர்வு, மயக்கம் (கழுமல்-மயக்கம்)

தான் துழந்த அட்ட தான் ஆக்கிய

தீம்  - இனிமையான, அமுது போன்ற,,

புளிப் புளிப்பு

பாகர்  - சமையல்

இனிது எனக் கணவன் உண்டலின் நன்றாக இருக்கிறது என கணவன் உண்ண

நுண்ணிதின் - நாவால் சுவையுணர்ந்து

மகிழ்ந்தன்று மகிழ்ந்து

ஒண்ணுதல் ஒளியுடைய நெற்றி

முகனே முன்புறம் ( ஒளியுடைய நெற்றியின் முன் புறம்)

தலைவியின் ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் மிகவும் நுண்மையாக தன் மகிழ்வைக் காட்டியது.

 கூடலூர் கிழார் பாடல் இது தாங்க.

எனக்கு, தலைவி மோர்க்குழம்பு தான் செய்தாளா? என்று ஒரு சந்தேகம்,,,,,,,,,,,,,

உங்கள் கருத்துக்கள் வேண்டி,,,,,,,,,,,

                                                                 
                                Image result for தலைவாழை இலை சாப்பாடு

படம் நன்றி கூகுள்



Sunday 9 August 2015

திருச்சி செல்வோம்


                                                    திருச்சி செல்வோம்,,


     நான் கல்லூரியில் என் இருக்கையில் ஏதோ நினைவுகளுடன் அமர்ந்து இருந்தேன்.
முதல்வர் (ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின்) அழைப்பதாய் உதவியாளர் சொன்னவுடன், அவர்களைத் தேடிச் சென்றேன்.
அம்மா அழைத்தீர்களா? என்றேன்.
ஏன் இன்னும் மாணவ மாணவிகளுக்குச் சீருடை வாங்கவில்லை என்றார்.
இனி தான் வாங்க வேண்டும்மா என்றேன்.
சுதந்திர தினத்திற்குள் முடிக்க வேண்டும் என்றார்கள்.
சரிம்மா எப்பவும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் வாரத்தில் தான் தருவோம், இன்னும் சேர்க்கையே முடியவில்லையே என்றேன்.
பரவாயில்லை இன்று அல்லது நாளைக்குள் வாங்கி கொடுத்து விடுங்கள் என்றார்.
 இன்று வேண்டுமானாலும் செல்கிறேன் என்று கூறி புறப்பட ஆயத்தமானேன்.
துணைக்கு மற்றொருவர் வந்தால் நலம் என்றேன்.
சரி ராஜி மேடத்தை அழைத்துக்கொள் என்றார். அவர்களிடம் சொல்லி சீருடை வாங்க சொல்வோம் வாருங்கள் என்றேன்.
அவர்கள் மகி, தஞ்சை வேண்டாம் திருச்சி செல்வோம், அங்கு ஆடி தள்ளுபடி இருக்கு, விலையும் குறைவு என்றார்,
நான் உடன் இங்கேயும் தள்ளுபடி உண்டே என்றேன். அங்கு இன்னும் குறைவு என்றார்கள். எனக்கு திருச்சி என்றதும் மகிழ்வு தான்,,,,,,,,
சரி திருச்சி செல்வது என முடிவு செய்து முதல்வர் அவர்களிடமும் தெரிவித்து அனுமதிப்பெற்று 12.50 க்கு ஒரு புகைவண்டி தஞ்சை திருச்சி வழியாக செல்கிறது என்றதால் விரைவாக கிளம்ப ஆயத்தமானேன்.புகைவண்டி பிடித்து ஏறி அமர்ந்து திருச்சி வந்தது கூட தெரியவில்லை,, என்ன மகி விழித்துக்கொண்டே கனவா என்றதும் தான் நினைவிற்கு வந்தேன். ஏதோ பல நினைவுகள். இறங்க வேண்டிய இடம் வந்தது.
  புகைவண்டி விட்டு இறங்கியதும், விரிவுரையாளர் உங்களை ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறேன் ஒரு பத்து நிமிடங்கள் தான் ஆகும் போகலமா? என கேட்டார். சரி என்றவுடன் அங்கு சென்றோம்.
இன்று வெள்ளிக்கிழமை, பரணி நட்சித்தரம் என்றார், நான் சிறு கோபத்துடன் உங்க வேலையை ஆரம்பித்து விட்டீர்களா? என்றேன்.
இல்லடி,,,,,,, பத்து நிமிடம் தான்,,,,,,
சரி வாங்க என நானும் பின் தொடர்ந்தேன்.
அவர் எங்களை அழைத்துச் சென்றது

                
   திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடி
 ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்திகள் திருக்கோயில். 
                
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
  சரி வந்தாகிவிட்டது, அவர்களின் நம்பிக்கைக்காக நாமும் சுற்றிவோம் என சுற்றினேன்.
என்னுடன் வந்த விரிவுரையாளர் ராஜேஸ்வரி அவர்கள் சுவாமிகள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
    சுவாமிகள் வரலாறு, கேட்க நன்றாக இருந்தது.
       முன்பு திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில் குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.

   ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர், குருநாதரிடம் தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம் பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கைக் கால்கள் இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளைத் தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட் வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.
இப்படி நிறைய இருக்கு என்றார்கள்.

      குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர் மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடந்து வருகிறது.

    சம்ஹாரம் என்பது முருகன் செயல், இவரும் அந்நிலை தான்,  இவர் சொல்வது, ஒரு மனிதன். பண்பட்ட மனிதனாக வாழ்வதற்குத் தனக்குள் இருக்கும் சத்ருக்களை (எதிரிகளை) முதலில் அவன் சம்ஹாரம் செய்ய (கொல்ல) வேண்டும். நமக்குள் இருக்கும் காம, குரோத, லோப மோக, மத, மாச்சர்யங்களை அழிக்கவேண்டும். இதுதான் நிஜமான சம்ஹாரம் என்று சொன்னவர் என்றார்.

உண்மை தானே,,,,,,,, 

   இன்று பரணி நடச்சத்திரம் சுடச்சுடச் அன்னதானம் நடந்துக் கொண்டு இருந்தது, அங்கு வரும் அத்துனைப் பேருக்கும் உணவு அளித்தார்கள். நாங்களும் அமர்ந்து உண்டு, எங்கள் வேலையைத் தொடரக் கிளம்பினோம்.

ஆஹா,  நானும் இது போல் பதிவு எழுத ஆரம்பித்துவிட்டேனோ,,,
என் சக விரிவுரையாளர் கேட்டுக்கொண்டதற்காகப்  பதிவிட்டேன்.
   நம் பதிவர் தஞ்யைம்பதி அவர்களுக்கும் நன்றி.

Tuesday 4 August 2015

அந்நியமான அரங்கேற்றுகாதை


                                     
                    அந்நியமான அரங்கேற்றுகாதை
                                                                                     


                                           



                                              சிலப்பதிகாரம் க்கான பட முடிவு

       ஒருவர் நம்மை அந்நியப்படுத்தும் போது,
  நாம் எவ்வளவு வேதனைப்படுவோம், அப்படித்தான்,,,,,,, என்ன, ஆரம்பமே இப்படியா என்று போய்விடாதீர்கள்,,

   தமிழ் முதுகலை வகுப்பிற்குப் பாடமாகச் சிலப்பதிகாரம் வைக்கப்பெறும் காலத்தில் அதன் அரங்கேற்றுகாதை மட்டும் வலைக்கோட்டுக்குள்,,,,,

 என்னங்க எதுவும் புரியலையா????

தமிழ் மொழியின் காப்பியங்கள் என்று ஐந்து என்பர். அவை

1, சிலப்பதிகாரம்      - இளங்கோவடிகள்
2, மணிமேகலை     - சீத்தலைச் சாத்தனார்
3, சீவகசிந்தாமணி   - திருத்தக்கதேவர்
4, வளையாபதி       - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5, குண்டலகேசி      - நாதகுத்தனார்

இது நீங்கள் அனைவரும் அறிந்ததே, சரி அப்புறம் ஏன் இந்தப் பதிவு என்று தானே,,,,


   சிலப்பதிகாரம் மூன்று பெரும் பிரிவுகளாகவும் ( இதனைக் காண்டங்கள் என்பர்)
   முப்பது சிறு பிரிவுகளாகவும் ( இதனைக் காதைகள் என்பர் )
  பகுக்கப்பட்டுள்ளது.
இதில் 3 வது காதை அரங்கேற்றுகாதை தான் நான் சொல்ல வருவது, அது ஏன் அந்நியமானது என்று கேட்கிறீர்களா? பாடத்திட்டத்தில் சிலப்பதிகாரம் முழுமையும், (அரங்கேற்றுகாதை நீங்கலாக) என்று குறிக்கப்பட்டிருக்கும்.
     வெறும் 175 அடிகளே கொண்ட கடுகு அளவான அரங்கேற்று காதையை மட்டும் விலக்கி வைத்ததன் காரணம்,,,,,,,,ஏன்?

   கடுகு சிறுத்தாலும் காரம் மிகுதி, அந்தச் சின்னஞ்சிறு காதையைத் தெளிவுற நடத்தும், தமிழிசை, தமிழ்நாடகப் புலமை நிறைந்த பேராசிரியர்கள் அன்றைக்கு யாரும் இல்லை, என்பது பாடத்திட்டக் குழுவினரின் கணிப்பு என்று பேராசிரியர் ஒருவர் கூறினார். (என் முனைவர் பட்ட ஆய்விற்காய் நான் என் தேடுதலைத் தொடங்கிய போது.)

   அன்றைக்கு அரங்கேற்றுகாதையைப் பாடத்தில் சேர்த்துப், பேராசிரியர்கள் தங்கள் அளவில் கற்றுக் கொடுத்து, கருத்தரங்குகள் நடத்தியும், விவாதித்தும் வந்திருந்தால், அந்த மாணவர்வழி வந்த வாரிசுகள், கொஞ்சமாவது அதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பார்கள். அப்படிச் செய்யத் தவறியதால் அரங்கேற்றுகாதை எனும் அரியச் சுரங்கம் நமக்கு அந்நியப்பட்டுப் போயிற்று.  
                                             அரங்கேறும்,,,,,,,,,,,,,,,,,,,


Saturday 1 August 2015

இது நல்லா இருக்கு

                                                        இது நல்லா இருக்கு
                                          

எனக்கு வந்த வாட்ஸ் அப் செய்தி,
நல்லா இருக்கா என்று படித்து பாருங்கள்,

உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்,