Friday 29 April 2016

மெய்ப்பொருள் காண்ப தறிவு

  மெய்ப்பொருள் காண்ப தறிவு     

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
                          மெய்ப்பொருள் காண்ப தறிவு

 திருக்குறள் பதிவு இல்லீங்க,,,,

  எனக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவல்,, தகவல் நல்லா இருக்கே என்று சரிபார்க்காமல் நான் சிலருக்கு அனுப்பிவிட்டேன். அதில் நம் வலைப்பூ பதிவர் சகோதரர் திரு கரந்தை ஜெய்குமார் அவர்களுக்கும் தான். அவர்கள் தவறான தகவல் சகோதிரியாரே என்று சொன்னதும்,, ஆஹா இப்படி பன்னிட்டோமே என்று மனம் வருந்தியது. உடனே ஆம் சகோ நான் இப்போ தான் சரிபார்த்தேன். தங்கள் தகவலுக்கு நன்றி என்று பதில் அனுப்பினேன். பிறகு தான் இந்த பதிவு,,, எழுத நினைத்தேன்.

  சரி, தகவல் இது தாங்க
                                                 
       நோட்டா ஓட்டு 35% க்கும் மேல்  பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்குங்க, அதாங்க அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன்.  எப்படி எனில் நோட்டா ஓட்டு 35% க்கும் மேல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது,,

   மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,அதுமட்டும் இன்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,,,,

      அதன்பின்னர் ஆறு மாதக்காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படும்,,,,,,,,, பிறகு தேர்தல் வரும் அதில் புதிய நல்லவர்கள் வருவார்கள்,, பின் நல்லாட்சி நடைப்பெறும் என்று,,,

   இதுதாங்க செய்தி,, இந்த செய்தி எனக்கு பிடித்திருந்ததால் உடனே பலருக்கும் அனுப்பிட்டேன். நோட்டா என்றால் என்ன? என்று கூட யோசிக்காமல்,,,
அப்புறம் என்னங்க செய்தி நல்லா இருக்கா இல்லையா???

   சரி விசயத்திற்கு வருவோம். நோட்டா என்பது 100% வாக்கு பதிவாகனும் என்பதற்கு மட்டுமே,,

     எனக்கு யாரையும் பிடிக்கல ஓட்டுப்போட மாட்டேன். அன்று ஒரு நாள் விடுமுறையயை நல்லா கழிப்பேன் என்று வீட்டுக்குள்ளே இருக்காமல்,, வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கனும் என்பதற்கு தான்,,, இந்த நோட்டா.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

                                                                    வணக்கம் படம் க்கான பட முடிவு


           


Wednesday 27 April 2016

கவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,

   மனதோடு ,,,,,,,,,,,

                                     குறிஞ்சி பூ படம் க்கான பட முடிவு

முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,,

 காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது..... காவியகவி இனியா அவர்களின் கவிதைத் தளம்,,  என்னுள் பல உணர்வுச் சலனத்தை ஏற்படுத்திய பாவரிகள், நேரில் பார்த்தது, பேசியது இல்லை என்றாலும் பலநாட்கள் பழகிய உணர்வு இவரின் எழுத்தால் என்னுள் எழுந்ததை ஏனோ மறைக்கத் தோன்றவில்லை,,, சமீபகாலமாக பதிவுகள் வரவில்லை இவர் தளத்தில். ஏனம்மா?? வேலைமுடித்து கொஞ்சம் கொஞ்சும் கவிகள் தாருங்கள் அம்மா,,   http://kaviyakavi.blogspot.in/
       நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை எனும் வார்த்தை வரிகளை நான் கண்டது இளையநிலா எனும் தளத்தில்,,  வார்த்தைகளைக் கோர்த்து அவைகளுக்கு கவிமூச்சளித்து உயிர்ப்பிக்கிற கவிபிரம்மா இவர். தன் இணையை இழந்ததால் இன்னும் இணையத்திற்கு வரவில்லை,,  வாருங்கள் அம்மா கொஞ்சம் மாற்றுச் சூழலுக்காய் எழுதுங்கள்,,, http://ilayanila16.blogspot.com/

     என்னுயிரே என உருக வைக்கும் வார்த்தைக் கோர்வைகள்,, உயிர் உருக்கும் கவிதைகளைக் கொட்டிவிட்டு,, இதுவரை நான் கவிதையே எழுதியதில்லை என்று கூறும் தன்னடக்கம் மிகுந்தவர்,, இவரின் மற்றொரு தளம் அக்கினிச்சுவடுகள்,, பூக்கள் மீதும் நெருப்பெரியும்,,,, எத்துனை வலிமிகுந்த வரிகள் ,,, ஈழத்து வேதனைப் பகிர்வு,, http://soumiyathesam.blogspot.com/ 

      தென்றல் சசி, தென்றல்  என இரு பக்கங்களுக்குச் சொந்தக்காரர்,,
 "பக்கம் நின்னு பார்ப்பவரே பார்த்து பேசி போனாலென்ன?
காத்தடிக்க உன் மூச்சும் கனலாத்தான் நெருங்குதய்யா"
இவைப்போன்ற ஏராளமான காதல் கவிவரிகள் வழங்கியவர், சிலகாலமாக இவர் தளம் அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தோழி http://veesuthendral.blogspot.in/

 கவிதைப் போட்டிகள் நடத்தியவர். கவிநூல் வெளியிட்டும் கவிதையில் கலக்குபவர், இவரின் 
"சொல்லாமல் வந்த காதலால் 
வாழ்வில் சுகந்தங்கள் வீச"
வாசித்துப்பாருங்கள் ,,,, ரூபனின்  எழுத்துப்படைப்புகள்,,  https://2008rupan.wordpress.com/page/6/ 

     எல்லாம் தெரிந்தவனும் இல்லை, எதுவும் தெரியாதவனும் இல்லை,, எனும் வரிகளுக்கு சொந்தக்காரர் திரு தளீர்சுரேஷ் ,,,  தளீர் ஹைக்கூ கவிதைகள்,, குட்டி குட்டி வரிகள் அத்துனையும் அழகு,, http://thalirssb.blogspot.com/ 

      பார்த்தவற்றைக் கவிதைக்குள் பதுக்கிவைக்கும்  பகல் திருடன்,,,,  சிவக்குமரன்  கவிதைகள்
"நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நமக்கு பங்கென்ன? - அட
மூக்கைப் பொத்திக்கொண்டு 
நகர்வோம் வேறென்ன?"
இற்றைய நாளோடு பொருந்தும் வரிகள்,, http://sivakumarankavithaikal.blogspot.com/

 யாழ்பாவாணின் எழுத்துக்கள்  யாழ்பாணத்து வலிகள் இவரின் வார்த்தைகளில் உண்டு,, எல்லா துறையும் இவரின் கவியில் துளிர்க்கும் ,,,,
சொல்பவர்கள் எல்லோரும் 
சொல்லலாம் எதையும்,,,,,  எனும் வரிகளை வாசியுங்கள்   http://eluththugal.blogspot.in/ 

     நான் நூலகம் சென்றதில்லை புத்தகங்கள் படித்ததில்லை,, என்று சொல்பவர்,, ஆனால் அழகான காதல் கவிதைகள் தருபவர்,, நான் தொடரும் புது பதிவர், திரு அஜய் சுனில்கர் ஜோசப்  பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்,, http://ajaisunilkarjoseph.blogspot.com/2016/04/blog-post_
                                         குறிஞ்சி பூ படம் க்கான பட முடிவு
                                                                                     தொடரும்,,,,,,,,,,,,,
படங்கள் இணையத்திலிருந்து,,,

Saturday 23 April 2016

மனதோடு ,,,

   மனதோடு ,,,
பூக்கள் க்கான பட முடிவு

    தொடர்பதிவு ,, எனக்கு புதுசு,,  புதுகை அய்யா திரு முத்துநிலவன் அவர்கள் ஆரம்பித்த இந்த தொடர் ஓட்டத்தில் என் தளத்தினை அறிமுகப்படுத்தியவர் நம்ம  தேவகோட்டை கில்லர் தான், அன்றே நானும் இத் தொடர்பதிவினை எழுதனும் என்று நினைத்தேன். பல வேலைகளால் எழுத இயலவில்லை,, ஆனால் இன்று தம் பதிவினில் என்னை, மனம் கவர்ந்த பதிவர்கள் எனும் தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார், http://unjal.blogspot.com/  ஞா.கலையரசி அவர்கள்,,, நன்றியுடன்,, 
இதோஅவர்களுக்காக 

  நான் விரும்பும் பதிவர்கள் என் தளத்தின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும்,,,, 

கரந்தைஜெயக்குமார்
    http://karanthaijayakumar.blogspot.com/ அவர்கள் ஆரம்பித்து தான் என் வலைப்பூ,, இவரின் எழுத்துநடை எனக்கு வரலாற்று நாவல் வாசித்த உணர்வை ஏற்படுத்தும்,, நல்ல நடை,,பயணங்கள் பற்றிய பதிவுகள் மிக அருமை, அதனினும் இவரின் நூல் விமர்சனம் வெகு அருமை, எந்நிலையிலும் மாறா புன்னகைக்கு சொந்தக்காரர்,,பதிவுலகில் எனக்கு முகம் தெரிந்த ஒரே மனிதர்,,,

தஞ்சையம்பதி
    நான் வலைதளம் ஆரம்பித்த தொடக்க நிலையில், அனைவரும் Followers List வைங்க வைங்க என்று சொன்னார்கள்,, ( நாம என்ன வைச்சிக்கிட்டா, வைக்காம வஞ்சனம் பன்னுறோம்,, ஹா ஹா ஹா,,,) நான் கேட்டுக் கொண்டதால் Followers List தொடர்பவர்கள் எப்படி வைப்பது என்று சொல்லிக் கொடுத்தவர்,, நம் தஞ்சையம்பதி http://thanjavur14.blogspot.in அவர்கள்.  அவருக்கு நன்றி இப்போ தான்,,, இங்கே தான்,,, நன்றி சொல்கிறேன். தங்கள் உதவிக்கு நன்றிகள் பல. எங்கள் ஊர்காரர் தான். இம்முறை இங்கு வந்தும் எங்களைச் சந்திக்க வந்த நேரத்தில் நான்  இல்லை. ஆனால் தொலைப் பேசியில் பேசியது மகிழ்வான நிமிடங்கள். ஆன்மீக எழுத்தில் நாட்டம் ஏற்பட்டதும் இவரின் பதிவுகளை வாசித்த பிறகு தான். எல்லா நிகழ்வுகள் பற்றியும் இவர் தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
  
கோயில் பிள்ளை
   வணக்கம் அரசே, என நான் விளிக்கும் திரு http://koilpillaiyin.blogspot.in/   கோயில்பிள்ளை அவர்கள் என் பதிவுகள் அனைத்திற்கும் வெளிப்படையான பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தக் கூடியவர்.இவர் பதிவுகளின் தலைப்புகள் அனைத்தும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாத கிண்டல் இல்லாத எழுத்து, நாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழய மரபிற்கு சொந்தக்காரர்,,  நான் காப்பியங்கள் குறித்து எழுத வேண்டும் என்றார். இன்னும் எழுதாமல் இருக்கிறேன். விரைவில் எழுதனும், இவர் இப்பவும் குழந்தையாம்முங்கோ, உப்பிட்ட இங்கிலீஷ் மண்ணிற்கு பிறகு பதிவுகள் இவர் தளத்தில் காணோம்,,                        
இப்போ நீ எங்கேப்பா?  என்ற அவரின் பதிவுகள் படியே,, 
 இப்போ நீங்கள் எங்கேப்பா?????????????

 தேவகோட்டை கில்லர்ஜி
        இவர் எழுதாத துறைகளே இல்லை, பாராளுமன்றத்தின் மீது தனியாத தாகம் போலும்,,  நல்ல ஆசைதான்,, நியாம் தான்,  என் பதிவுகள் அனைத்திலும் இவரின் பின்னூட்டம் இருக்கும். பதிவு வெளியிட்டவுடன் பின்னூட்டம் வரும்,, எனக்கு மட்டும் அல்ல, பதிவுலகில் பலருக்கும் இவர் இப்படித்தான். சிவசம்போ சொன்னா சரியாகத் தான்  இருக்கும். 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டியவர்,, இந்த சமூகத்தின் மீது கவலைக் கொண்டதால்,  கோபம் கொண்டு, கொட்டும் எழுத்துக்கள் இவர் தளத்தில் ஏராளம்.

உண்மையானவன்
   http://unmaiyanavan.blogspot.in/ இவர் தொடக்கத்தில் என் பதிவுகளுக்கு உற்சாகம் தரும் பின்னூட்டம் பல அளித்தவர்., இப்போ வீட்டிற்கு புதியவர் வருகையால் இவர் கொஞ்சம் பிஸிபோல,,, ஓவியாவின் ஆசையை நிறைவேற்றியதால் ஏற்பட்ட மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லைப் போலும்,,,, அவர் வருகையை எதிர்பார்த்து சிட்னியில் நாரதர் வெயிட்டிங்,,,,,

ஊமைக்கனவுகள்
  என் துறைச்சார்ந்த, இல்ல இல்ல இவர் துறை ஆங்கிலமாம். ஆனால் தமிழ் தான் இவரின் மூச்சு பேச்சு எல்லாம். தமிழ் ஆர்வலர், நான் ஆசான் என அன்புடன் அழைக்கும் திரு http://oomaikkanavugal.blogspot.com தான். இவரின் எழுத்துக்களைக் கண்டு நான் வியந்தது உண்டு. என் கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்கள் தரும் விளக்கத்திற்கு நான் பட்டிமன்றம் நடாத்தியதுண்டு. இவர் எழுத்துக்களை நான் பல முறை வாசித்து வாசித்து அதனுள்ளே சென்று என்னை மறந்த பொழுதுகள் ஏராளம்,,. பழந்தமிழ் இலக்கியங்கள் இவரின் எழுத்தில் புத்தொளிப்பெறும், கவிதையில் வார்த்தைகள் இவர் கரங்களில் தவழ ஏங்கித் தவிக்கும், சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு, இவரின் சொல்லுக்கும் பொருள் உண்டு,, வலிமிகுந்ததாலா இல்லை வேலைமிகுந்ததாலா அவரை இன்னும் இங்கு காணவில்லை. பதிவுலகில்,,, உங்களை அனைரும் எதிர்பார்க்கிறோம் ஐயா, தொடர்ந்து எழுதுங்கள்,,

வலிப்போக்கன்
  சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளைப் பதிவிடும் தமிழ்பதிவராம். ஆம் அவரின் பதிவுகள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும். சமூக அவலங்கள் கண்டு மனம் கொதிக்கும் சமூக ஆர்வலர் இவர். சாதிய கொடுமைக்கண்டு தம் எழுத்துக்கள் வழி சீற்றம் காட்டுவார். இதனைப் படித்துப்பாருங்கள்,,, 
சாதி பெருமை பேசிய நடிகன்........... 

அவர்கள் உண்மைகள்

  உண்மைகளை மட்டுமே பேசும் இவர், தன்னைப் பார்த்தார்கள் என்ற உண்மையை மட்டும் ஒத்துக்கொள்ள மாட்டார்,, பூரிக்கட்டை அடி இவர் மண்டையைக் கலக்கிவிட்டிருக்குமோ,,, அரசியல் கட்சிகளை விளாசுவதில் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள் இவர் இங்குள்ள ஆள் இல்லை என்று,,   பொழுதுபோக்கு அவ்வளவு தான் வேறு எதையும் எதிர்பார்த்து இவர் எழுதலையாம்முங்கோ,, நீங்க யாரும் பூரிக்கட்டை அனுப்பிடாதீங்கோ,, 
http://avargal-unmaigal.blogspot.com/2016/04/blog-post.html

ஜோக்காளி

   தமிழ்மணம் வரிசையில் முதல் இடம்,, நம்மை சிரிக்க மட்டும் அல்லாமல் சிந்திக்கவும்  வைக்கும் பதிவுகள். பூருசனைத் தாக்க மட்டுமா பூரிக்கட்டை,, பதிவு படித்து குழப்பம் வேண்டாம்,, அவரு இல்லங்க இவரு,, சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா,,,,,  சப்பாத்தி போடுமா? சாப்ட்வேர்,,, படித்துப் பாருங்கள்,,,

திண்டுக்கல் தனபாலன்

    
 தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் எனும் வரிகள்,,,, அனைவ்ருக்கும், கணிணியில் அனைத்து தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி தருபவர். தற்போது பிற பணிகள் இவரைச் சூழ்ந்து இருப்பதால் வலைக்குள் வரும் வருகைக் குறைந்துள்ளது போலும்,,,, திருக்குறள் இவர் விரும்பும் இலக்கியம் போலும். அதனோடு தொடர்புபடுத்திய குறள் வரிகள் இவர் பதிவுகளில் ஏராளம்.



                     பூக்கள் க்கான பட முடிவு
                             விரும்பும் பதிவர்கள் இன்னும்,,,,
படங்கள் இணையத்தில் இருந்து,,,,                                                  

Wednesday 13 April 2016

காலம் தந்த பொக்கிஷம்

                      காலம் தந்த பொக்கிஷம்



என் சிரிப்பின் ஆணிவேர் இவள்,,


பால்மனம் மாறாத

பவளசிரிப்பில்

இதழோரம் வடிந்த

நீர்த்துளிகளில்

நான் கரைந்தே

போனேன்,,

                    காலம் தந்த பொக்கிஷம் இவள்,,

                    என் கன்னத்தில் முத்தமிட்ட

                    ஈரம் இன்னும் காயவில்லை 

                    அதற்குள் ஆகிவிட்டது

                    அகவை அய்ந்து,,







                                

                                 







                                      




                                                  குழந்தைக்கு பிறந்தநாள் கவிதைகள் க்கான பட முடிவு
நன்றி,,,,

Saturday 2 April 2016

நினைத்துப் பாருங்கள்

                                                  நினைத்துப் பாருங்கள்

      நினைத்துப் பார்க்கிறேன்,, பள்ளியின் விடுதியில் ரேங்க்கார்டு கொடுத்தார்களா? என்ற விடுதி பொறுப்பாளரிடம், பதிலே சொல்லாமல் மெதுவாக மிக மெதுவாக பையில் இருந்து எடுத்துக்கொடுத்தேன், பயத்துடன் நின்றேன்,,,

அந்த நினைவுகள் இன்று, 

பையன் வந்து அம்மா, மேம், கார்டு கொடுத்தார்கள் என்றான்,, சரிப்பா கொடு என்று வாங்கி என்ன கிரேடு என்றேன்,, 

அவன், அம்மா,  அப்பாகிட்ட சொல்லி எப்படியாவது எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுக்க சொல்லுங்கள் என்றான்,,

சரியாக அதே நேரம் சின்னவளும் வந்துவிட்டாள்,, அம்மா இந்தாங்க என்னுடையது.நான் அனைத்திலும் O  கிரேடு என்றாள், எனக்கு கண்டிப்பாக டேப் (Tablet) வேண்டும் என்றாள்,, அப்பாவிடம் சொல்கிறேன் என்றேன்.

என்னவரும் வந்த பின் என் பையன் என் பின்னால், சின்னவளோ தந்தையின் தோளில் தொங்கிக்கொண்டு, அப்பா இந்தாங்க கிரேடு அட்டை, எனக்கு டேப் கட்டாயம் வேண்டும் என்றாள். சரி என்றார்.

பையனின் அட்டையை பார்வைக்கு தந்தேன்,, பார்த்தவர் நிமிர்ந்து அவனைப் பார்த்தார். அவன் என் பின்னால் இருந்துக்கொண்டே அம்மா சொல்லும்மா எனக்கு சைக்கிள் என்றான்,, இரண்டில் A+ இல்லை, எனவே சைக்கிள் இல்லை என்றதும் அவன் அழ ஆரம்பித்து விட்டான்,,,, 

நான் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவன் சமாதானம் ஆகல,,,,

இதில் இவள் வேற இப்படி செய்தால் அவன் என்ன ஆவான்,,,,

பையன் 2 ஆம் வகுப்பில் இருந்து 3 ஆம் வகுப்பு,


இவுங்க LKG  இருந்து UKG



நினைத்துப் பாருங்கள் அத்தருணங்களை ,,,,,,

எத்தனை முறை அப்பாவிடம் பொய் சொல்லி இருப்பீர்கள் ?

நீங்கள் பெற்ற மதிப்பெண்களை மறைப்பதற்காக ;

பள்ளியில் முட்டி போட்டிருக்கிறீர்களா?