Thursday 28 July 2016

உமாமகேசுவரமும் இராமநாதமும்


உமாமகேசுவரமும் இராமநாதமும்


  நாம் படித்த பள்ளியை, நாம் எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா? அவ்வாறு நினைப்பின் என்ன செய்தோம். கிடைக்கும் பதில் நம்மில் எத்துனைப்பேருக்கு நல்ல பதிலாக கிடைக்கும்.

      ஆனால், இவர் தான் படித்த பள்ளியில் இன்று ஆசிரியர்,,, தான் படித்த, பள்ளியினை நிறுவிய தகைச்சான்ற பெருமகனார் நினைவினைப் போற்றும் வகையில் தன் செஞ்சோற்றுக் கடனை ஆற்றியுள்ளார். ஆம், வலைவுறவுகளே நாம் அனைவரும் அறிந்தவர் தான்கரந்தை ஜெயக்குமார் எனும் வலைப்பூவில் நல்கட்டுரைப் பல எழுதிவரும்

கரந்தை ஜெயக்குமார்


அவர்கள் தான்.

      கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் இவரின் உழைப்பு என்பது எழுத்துக்களில் விவரிக்க முடியா ஒன்று,,, உமாமகேசுவரனார் அவர்களின் அரும் தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு தபால்தலை வெளியிட்டது. அதற்கான மாபெரும் பணியினை நிர்வாகத்துடன் இணைந்து  சிரம் மேற்கொண்டார். சங்கத்திற்காக இன்னும் பல பணிகளை செய்துள்ளார். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி இவைகளின் தோற்றம் இவரின் உழைப்பினைப் பறைசாற்றும்.


      உமாமகேசுவரனார் துவக்கிய கல்வி நிறுவனங்கள்   இற்றை நாள் சங்கச் செயலாளர் செம்மொழிவேளீர் கரந்தை ச. இரதமநாதன் அவர்களால் ஆல் போல் தழைத்துள்ளது. சங்க வரலாறு என்பது இவரின் வரலாறு தான்.


     இராமநாதம் எனும் நூல் உணர்த்தும் செய்திகள் இவை.  உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கரந்தை சரவணன், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் ஆகிய இருவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளனர்.

         


                            இராமநாதம்

  அன்பரின் பணியைப் பாராட்டி கரந்தைத் தமிழ்ச் சங்க கல்வி நிறுவனங்களின் பவளவிழா, நூற்றாண்டு விழா நடைபெற்ற சமயத்தில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் பெயரில் விருது வழங்கி சிறப்பித்தனர்.

                          இராதாகிருட்டினன் விருது

  புகழெனின் உயிரும் கொடுக்குவர்,பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்
அன்னமாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்
எனும் புறநானூற்று வரிகள் வந்துப் போகின்ற மனதில்,,,,,,



வாழத்துக்கள் சார்,

காவேரியே நின் நனிநடையால் தஞ்சைக்கு பெருமையா??
எம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தால் வந்த பெருமையே

Wednesday 27 July 2016

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்



கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்

கரந்தைத் தமிழ்ச் சங்க கல்விநிறுவனம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்கள் தம் கல்வி நிறுவனம் குறித்து ஆங்கில மொழியில் நூல் ஆக்க பெரு அவா கெண்டார். அதன் வெளிப்பாடாக நூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையே அதற்கு பொருத்தம் எனக் கருதி தம் துறைப்பேராசிரியர்(ஓய்வு) திரு.அனந்தராவ் அவர்களுடன் இணைந்து 

Kingpin

of 

Karantai Tamil Sangam



 என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அதன் தமிழாக்க சுருக்கம்

தண்டமிழ் வேந்தன் தமிழவேள் நிறுவிய கல்விக் கோயிலாக அமைந்து கன்னித்தமிழுலகம் போற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

“ நிரம்பாது கொடுக்கும் செல்வமும் இவனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே

என்று புறப்பொருள் வெண்பாமாலை புகலுதற்கேற்ப தன் முன்னோர் காத்த முழுச்செல்வம், தான் சேர்த்த மொத்த செல்வத்தையும் கொண்டு உருவாக்கியது தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

பெயரெல்லாம் தமிழாக்கினார்

“ தமிழ் நாட்டில் தமிழ் தான் இல்லை

என்று மனம் நொந்து பாடிய பா வேந்தரின் ஏக்க வரிகளை போக்க வேண்டும் தெருவெல்லாம் தமிழ் மணக்கச் செய்தல் வேண்டும் என்று உறுதிக்கொண்டார். அதன் பயனாகக்  கடைத்தெருக்களின் விளம்பரப்பலகைகளில் உள்ள ஆங்கிலப் பெயர்களை மாற்றி அழகு தமிழ்ப் பெயர்களைச் சூட்டிடவும், அவையும் நல்ல தூய தமிழப் பெயர்களாகச் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக தில்லி தலைமையகத்திற்கு பலமுறை அஞ்சல்களையும் அனுப்பிவந்துள்ளார். பிற பள்ளியின் தலைவராக பொறுப்பேற்ற போதும் தம் பள்ளிப் போலவே பார்த்து வந்தார். ஆசிரியர் மாணவர் போற்றும் மாண்பாளராக திகழ்ந்தார்.

ஆசிரியர்கள் விரும்பும் ஆசான்

   அவரின் காலத்தில் ஆசிரியர்களுக்கு அனைத்து வகையிலும் புது மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரின் கீழ் பணியாற்ற அனைவரும் விரும்பினர் எனில் அது மிகையன்று. ஊருக்கு ஒரு பள்ளி என்று தற்போது கூறப்படுகின்ற முறையை அந்தக் காலத்திலேயே செயல்படுத்தியவர்.
தமிழ்ப் புலமையும் தொழிற்கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச் சிறந்தது என்பதால் கலைநூல்களையும் வெளியிட வேண்டும் என்று தமிழ் அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர். புலவர் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்க இவர் பட்ட பாடுகள் ஏராளாம்,,,,

மொழியின் பால் அவர்

  மொழி வளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ் மொழி பழமையானது இலக்கிய இலக்கண செறிவு மிக்கது என்பதனை நன்குனர்ந்த நம் தமிழவேள் அவர்கள் தம் பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சாக, மூச்செல்லாம் தமிழ்மூச்சாகத் தமிழ் பணிக்கே தம் வாழ்நாளைச் செலவிட்டார்.

   உலகின் கண் விளங்கும் உயர்கலைகள் பலவாகும். அவற்றுள் ஒன்று பேச்சுக்கலை. கற்றல் எளிது. கற்றவற்றைப் பிறருக்கு எடுத்து மொழிதல் அரிது. நா வன்மை மிக்கவர் நம் தமிழ் மகனார் நாவலர் உமாமகேசுவரனார்.

 கண்ணுதற் பெருங்கடவுளாகிய உமாமகேசன் கழகமோடமர்ந்து பைந்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்த பான்மை போலச் செநதமிழ்ச் செல்வராம் தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தனிப்பெருந்தலைவராயமர்ந்து தண்டமிழை வளர்த்தாரெனின் அது மிகையன்று.

“ சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்
காய்த்தல் உவத்தல் அகற்றி

எனும் வரிகளுக்கு ஒப்பாய் கன்னித் தமிழ்க் கருத்துக்களைக் கடைப்பிடித்து வந்தவர்.

 இப்படியாக,,, இற்றைநாள் வளர்ச்சி வரை நூலினுள் ஏராளமான தகவல்கள் உள்ளன.

  பல்லாற்றானும் சங்க வளர்ச்சிக்கு உழைத்து வரும் அன்பருக்கு

இராதாகிருட்டினத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவும்

உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவும்

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவும்

  நடைபெற்ற அவையில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில்
          


   தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைபோராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்களுக்கு 

                                   இராதாகிருட்டினன் விருது 

வழங்கி சிறப்பித்தார்கள்.



வாழ்த்துக்கள் சார்,,,

                        பூக்கள் போட்டோ க்கான பட முடிவு




Monday 25 July 2016

இராமநாதம்

                                                                                                                                                                                                                                     இராமநாதம் 
  
        கரந்தைத் தமிழ்ச் சங்க கல்விநிலையங்களின் 75 ஆம் ஆண்டு விழாவில் உமாமகேசுவனரனார் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் இருவர் இணைந்து   இராமநாதம் என்ற நூலினை வெளியிட்டனர்.                                                                                                                                                                     

 

      காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழ பதிவாளர் அவர்கள் நூலினை வெளியிட நல்லாசிரியர் சிவபாலசுப்ரமணியன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது,,, உடன் எம் கல்லூரியின் முதல்வர் இரா. இராசாமணி அவர்கள், கரந்தைத் தமிழ்ச்சங்க தலைவர் நா.கலியமூர்த்தி அவர்கள், சங்கச் செயலாளர் ச.இராமநாதன் அவர்கள்,  நூல் ஆசிரியரும், உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான திரு.சரவனன் அவர்கள், நூலாசிரியரும் பட்டதாரி ஆசிரியர், வலைப்பூவர் கரந்தை ஜெய்க்குமார் அவர்கள், பின்னால் ஆசிரியர் பத்மநாபன் அவர்கள்





  

நூல் பற்றி பிறகு பார்ப்போம்.


Friday 22 July 2016

கனவு நனவானது


                                               கனவு நனவானது

 வணக்கம் வலை உறவுகளே,,, நலம் தானே அனைவரும்,,, வலைக்குள் வரமுடியா சூழல்,,,,

இனி எப்போதும் போல்,,,

 தஞ்சை நகர்க்கு விஞ்சு புகழ் சேர்த்த தலையாய மூன்றனுள்,  தண்டமிழ் மன்னன் தமிழவேள் நிறுவிய கல்வி கோயிலாக அமைத்து கன்னித்தமிழுலகம் போற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்

      தன்னால் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில் யாரேனும் ஒருவர் படித்து தேர்வு எழுதி பட்டம் பெற்று வெளியில் செல்லக் கேட்பேனாகில் அந்நாளே எனக்கு பெருமைமிகு நன்நாள் என உள்ளம் உருகிய பெருந்தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார். அவர்களின் பெயர் தாங்கி, இற்றைநாளில் ஏராளமான, பட்டம் பெற்ற நல்மாணாக்கர்களை உருவாக்கிய, 

         யான் பனியாற்றும் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழா

அதே நாள் உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின்  75 ஆம் ஆண்டு விழாவும்,,,

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மற்றொரு கல்வி நிறுவனமாம் இராதாகிருட்டினத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவும்,,,

  
                  
                   
                   
                 
                   


                   
                    இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக தழைத்தோங்க வாழ்த்துங்கள்.

                                                     பூக்கள் போட்டோ க்கான பட முடிவு